உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிப்ரவரி தொடங்கிவிட்டது: அஜித் பட அறிவிப்பு எப்போது?

பிப்ரவரி தொடங்கிவிட்டது: அஜித் பட அறிவிப்பு எப்போது?


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கப்போகிறார் என்று கடந்த ஆண்டே பேச்சு வந்தது. பல பேட்டிகளில் ஆதிக் ரவிச்சந்திரனும் அதை உறுதிப்படுத்திவிட்டு, பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இப்போது பிப்ரவரியும் வந்துவிட்டது. எப்போது அறிவிப்பு வரும் என அஜித் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அஜித்தின் சம்பள பிரச்னை காரணமாகவே அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. தவிர, கார் ரேசிலும் அஜித் தீவிரமாக இருக்கிறார். அஜித் கேட்கும் அந்த சம்பளத்தை கொடுத்தால், படத்தின் பிஸினசில் பாதிப்பு ஏற்படும். படத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு பெரிய ரிஸ்க் என்பதால், பல நிறுவனங்கள் தயங்குகின்றன.

ரோமியோ பிக்சர் ராகுல், வைஜெந்தி பிலிம்ஸ் உட்பட பலர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இன்னும் சிலரும் அஜித் படத்தை தயாரிக்க ரெடி. ஆனால், அஜித் சம்பளத்தை குறைத்தால் மட்டுமே தயாரிப்போம் என்கிறார்களாம். ஆனால், அஜித்தோ 180 கோடி வரை சம்பளம் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

பிப்ரவரி தொடங்கிவிட்டதால் விரைவில் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டு, படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் ரேஸ் நடக்கும்போது இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி.பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா என 3 பேரும் அஜித்தை சந்தித்து பேசினார்கள். இவர்களில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார் என்று கூறப்பட்டாலும், இசையமைப்பாளர் விஷயத்திலும் சிக்கல் நீடிக்கிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !