ஏப்., 30க்கு தள்ளிப்போனது ‛பெத்தி'
ADDED : 2 days ago
தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் 'பெத்தி'. நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, முக்கிய வேடங்களில் சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, ஷோபனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படம் வரும் மார்ச் 27ல் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்தனர். ஆனால் பட பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என செய்தி வெளியானது.
இந்நிலையில் படத்தை ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளனர். அதாவது ஏப்., 30ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். தெலுங்கில் உருவானாலும் இப்படம் தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் மிருணாள் தாக்கூர் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இதற்காக அவருக்கு கணிசமான தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.