‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா
ADDED : 103 days ago
அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா, நந்தா உள்ளிட்டோர் நடிப்பில் 2002ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மெளனம் பேசியதே'. யுவனின் இசையும், பாடல்களும் இந்த படத்தின் வெற்றியில் ஒரு பங்காக இருந்தது. காதலர் தினத்தையொட்டி நேற்று இப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் நடித்த சூர்யா, திரிஷா ஆகியோர் படம் குறித்து அதிகமாக பேசவில்லை. ஒரு வீடியோ மட்டும் வெளியிட்டு அமைதியாக இருந்துவிட்டனர்.
ஆனால் இன்னொரு ஹீரோயினாக நடித்த லைலா மும்பையில் இருந்து சென்னை வந்து படம் குறித்து பேசினார். சென்னையில் நடந்த முதல் ஷோவுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தார். படம் குறித்து ஆர்வமாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தமிழில் தொடர்ந்து நடிக்க லைலா ஆர்வமாக இருக்கிறார். அதனால் கோலிவுட் மீது பாசமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.