உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள்

சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள்

தமிழ் சினிமாவில் கடந்த 10, 15 வருடங்களில் நிறைய புதியவர்கள் வந்து அவர்களுக்கான தனி இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களில் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்திலேயே நண்பர்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். சிவாவுக்கு சீனியர் சந்தோஷ். இருவரும் திருச்சியில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரியில் படித்தவர்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக இசையமைக்கும் படம் 'சேயோன்'. சிவகார்த்திகேயன், இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் ஆகியோர் கல்லூரி காலத்து நண்பர்கள். ஆனால், அவர்கள் மூவரும் இதற்கு முன்பு ஒன்றாக இணைந்து 'கனா' படத்தைக் கொடுத்துவிட்டார்கள்.

நண்பன் சிவாவுடன் முதல்முறையாக இணைவது பற்றி சந்தோஷ் நாராயணன், “நட்பின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்பாவி கல்லூரி பிள்ளைகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றாகக் கலை உருவாக்கிய பிறகு, தகுந்த காத்திருப்புக்குப் பிறகு, உனக்காக பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன் சிவா. இன்னும் அதிகமாக இந்தப் படத்தில் மிகுந்த ஆர்வமுள்ள கமல்ஹாசன் சாரின் குழுவுடன் வேலை செய்வதற்கு. என் முழு இதயத்துடன் உங்களை ஆதரிப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !