உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு

'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு

கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற 55வது சர்வதேசத் திரைப்பட விழாவில் காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஒரே மேடையில் தோன்றினர் அப்போது 'காந்தாரா' படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் போன்று நடித்த ரன்வீர் சிங் 'ஓ...'என்ற ஆங்கார குரலையும் எழுப்பினார். இதனை அவர் எதார்த்தமாக செய்தாலும் ரிஷப் ரெட்டியையும், பெண் தெய்வத்தையும் கிண்டல் செய்வது போல் மாறிவிட்டது. இதுபெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.

ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்து கொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார். இதனிடையே இது கடலோர கர்நாடகாவின் புனிதமான 'பூத கோலா' கலாச்சாரத்தை அவமதிப்பதாகக் கூறி, பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் மேத்தல் என்பவர் ரன்வீர் சிங் மீது புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் ரன்வீர் சிங் மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் மத விரோதத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தன்மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யுமாறு நடிகர் ரன்வீர் சிங் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். எதார்த்தமாக இயல்பாக நான் நடந்து கொண்ட சம்பவம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து தான் பகிரங்க மன்னிப்பு கேட்டு விட்டதாகவும் அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !