உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா
இந்திய அளவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரது காதல் திருமணம் நாளை மறுநாள் பிப்ரவரி 26ம் தேதி உதய்ப்பூரில் உள்ள அரண்மனை ஹோட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று காலை விஜய், ராஷ்மிகா இருவரும் உதய்ப்பூர் சென்றடைந்தனர்.
அவர்கள் திருமண விவரம் குறித்து இதுவரை எந்தப் பதிவையும் இருவரும் பதிவிடவில்லை. ஆனாலும், உதய்ப்பூர் ஹோட்டலில் எடுத்த சில புகைப்படங்களை இருவரும் தனித்தனியே பகிர்ந்துள்ளனர். இரண்டிலும் அவர்கள் முகங்கள் இல்லை, விஜய் நீச்சல் குள புகைப்படத்தையும், ராஷ்மிகா உணவு மேஜை புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
அவையும் இன்ஸ்டா ஸ்டோரியில்தான் இடம் பெற்றுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு அவர்களிடமிருந்து என்ன அப்டேட் வரும் என அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி போல நிறைய ஜோடி புகைப்படங்களைப் பகிர்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது.