விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா 'மெஹந்தி' நிறைவு
இந்தியத் திரையுலகத்தில் இந்த வார பரபரப்பான செய்தியாக திரைப்படங்களின் வெளியீடுகளை விட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமண செய்திதான் இருக்கும். நாளை பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் உள்ள ஐடிசி மெமன்டோஸ் ஹோட்டலில் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
நேற்று 'மெஹந்தி' வைபவம் நடைபெற்றுள்ளது. அதில் இருவரது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பாகவே பலரும் அங்கு சென்றுவிட்டனர். நேற்று சினிமா பிரபலங்கள் சிலர் சென்றடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இன்று பிப்ரவரி 25, ஹால்டி மற்றும் சங்கீத் வைபவம் நடைபெற உள்ளது. நாளை திருமண நிகழ்வு. அது எந்த நேரத்தில் நடைபெற உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை. எந்தவிதமான புகைப்படம், மொபைல் போன் ஆகியவை வைபவம் நடைபெறும் இடத்தில் அனுமதி இல்லை என்கிறார்கள். திருமணம் முடிந்த பின்பு அவர்கள் தரப்பிலிருந்து ஓரிரு படங்கள் வெளியிடப்படலாம் என்று தகவல். மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.