திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக்
நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தவர். இயக்குனர் ஏ.எல். விஜய்யை மணந்த இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் சில வருடங்களில் ஜகத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது திருமணம் குறித்து கூறியுள்ளார்.
அதன்படி, வாழ்க்கை ஒரு மாதிரி சென்று கொண்டிருந்த காலம் அது. அப்போது ஜோசியர் ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் உங்களுக்கு 32 வயதில் திருமணம் நடைபெறும் என்று கூறினார். நான் என் மனதில், எனக்கு பாய் பிரண்டே இல்லை. இதெல்லாம் எப்படி சாத்தியம் என நினைத்துக் கொண்டேன். அவர் கூறிய கொஞ்சநாட்களில் ஜகத்தை நான் கோவாவில் சந்தித்தேன். முதலில் டேட் செய்து பழகி வந்தோம். அப்போது நான் கர்ப்பமும் ஆகிவிட்டேன். முதலில் நான் திருமணம் செய்கின்ற ஐடியாவில் இல்லை. ஆனால், கர்ப்பமாகிவிட்டேன் திருமணம் செய்து கொண்டு தானே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.