உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்!

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்!


ரவிமோகன் நாயகனாக நடித்த 'கோமாளி' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்த படம் 100 கோடி வசூலித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த 'டிராகன், டியூட்' படங்களும் 100 கோடி வசூலித்து கோலிவுட்டில் அவருக்கு ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தன.

இந்த நிலையில் அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், அடுத்தடுத்து நடிக்க புதிய படங்களில் கமிட்டாகி வரும் பிரதீப் ரங்கநாதன், சில கோடிகளில் இருந்த தனது சம்பளத்தை தற்போது 25 கோடியாக உயர்த்தி இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !