உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு

திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு


சென்னையில் நடந்த வேல்ஸ் பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். அதில் பேசுகையில், “நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை இப்போது தொடங்கியுள்ளேன்.

எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு உண்டு. என் முதல் படம் 'துள்ளுவதோ இளமை' இங்கே தான் எடுத்தோம். அதுமட்டுமல்ல அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடிவாங்கி இருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷ்ன் மற்றும் மேனிபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள்”''என்றார்.

விழாவில் பேசிய ஐசரி கே கணேஷ், “என்னுடைய கனவு பிராஜக்ட் என்றால் அது நடிகர் தனுஷ் அவர்களை வைத்து எடுக்க இருக்கும் 'வட சென்னை 2' தான் என்றே கூறலாம். அதேபோல் தனுஷ் நடித்துள்ள 'கர' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !