உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரே படத்தில் அனைத்தையும் இழந்த தவக்களை

பிளாஷ்பேக்: ஒரே படத்தில் அனைத்தையும் இழந்த தவக்களை


'முந்தானை முடிச்சு' படத்தில் ஊர்வசியின் நண்பர்களில் ஒருவராக வரும் தவக்களையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. அவரின் குறும்பை இப்போது நினைத்தாலும் சிரிக்க வைக்கும்.

தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. தாய் சுப்புலட்சுமி, தந்தை விஜயகுமார். தந்தை ஒரு துணை நடிகராக இருந்ததால், தமிழ் சினிமாவில், 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் அறிமுகம் ஆனார். கே.பாக்யராஜை சந்தித்து வாய்ப்பு கேட்டார். சிட்டிபாபுவின் தோற்றத்திற்காகவே முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க வைத்தார்.

ஒரு நாள் சிட்டிபாபு தூங்குவதை பார்த்த கே.பாக்யராஜ் அவரது தோற்றம் தவக்களை போன்று இருப்பதால் படத்தில் ஊர்வசி அவரை தவக்களை என்று கிண்டலாக அழைப்பது போன்று காட்சிகள் அமைத்தார். படம் பெரிய ஹிட்டானதால் சிட்டிபாபு என்ற இயற்பெயர் மறைந்து தவக்களை என்ற பெயரே நிலைத்தது.

இதனைத்தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில், அமிதாப் பச்சன், மோகன்லால், பாலகிருஷ்ணா, போன்ற நடிகர்களுடன் நடித்தார். தமிழில் காக்கிச் சட்டை, ஆண் பாவம், நல்ல பாம்பு, மதுரை சூரன், ஓசை, என் இரத்தத்தின் இரத்தமே, நீங்கள் கேட்டவை, தங்கமடி தங்கம், 'நாலு பேருக்கு நன்றி, பொண்ணு பிடிச்சிருக்கு, நேரம் நல்ல நேரம், மணந்தால் மகாதேவன் ஆகியவை உள்பட சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்

கடைசியாக மலையாள இயக்குநர் வினயன் இயக்கிய 'அற்புதத் தீவு' படத்தில் நடித்திருந்தார். 'பைரவி' உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததோடு, நூற்றுக்கணக்கான படங்களுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். சிட்டிபாபு அடிப்படையில் நடன கலைஞர் என்பதால் நடன பள்ளிகளும், நடன குழுக்களையும் நடத்தி வந்தார்

எல்லா நடிகரையும்போல சிட்டிபாபுவிற்கும் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. 'மண்ணில் இந்த காதல்' என்ற படத்தை தயாரித்தார். இதனால் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். அந்த படமும் வெளிவரவில்லை. இதனால் மனசும், உடலும் தளர்ந்து போகவே தனது 42வது வயதில் காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !