திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ?
தமிழக அரசியல் களத்தையும், திரையுலகத்தையும் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக வைத்திருப்பவர் நடிகர் விஜய். அவரிடமிருந்து விவகாரத்து கோரி அவரது மனைவி சங்கீதா அளித்த மனு கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு விசாரணை ஆரம்பமாகும் வரையில் விஜய் அமைதி காப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளர் குடும்ப திருமணம் ஒன்றில் விஜய், த்ரிஷா இருவரும் ஒரே காரில், ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வந்தது அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அது சார்ந்த செய்திகள் அடங்குவதற்கு முன்பே அதற்கு பதிலடி தரும் விதத்தில் தான் விஜய் மனைவி சங்கீதா தங்குவதற்கு வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்று புதிய மனுவை அளித்திருப்பார் என்று பேச ஆரம்பித்துள்ளார்கள்.
விஜய் குடும்பத்தினர் முதலில் சென்னை சாலிகிராமத்தில் வசித்தனர். அங்கிருந்து விஜய் அவரது மனைவியுடன் அடையாறு இந்திரா நகர் பகுதியில் குடியேறினார். அங்கிருந்து நீலாங்கரையில் ஒரு பிரம்மாண்ட பங்களாவைக் கட்டி அங்குதான் மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக அனைவருமே தனித் தனியாக வெவ்வேறு இடங்களில் வசித்து வருவதாகச் சொல்கிறார்கள். நீலாங்கரை வீட்டில் விஜய் மட்டும் இருக்கிறார். அவரது மனைவி சங்கீதா லண்டனில் வசிக்கிறார். மகன் அசோக் நகர் பகுதியில் தனி பிளாட் வீடு ஒன்றில் இருக்கிறார். மகள் பிஜி ஹாஸ்டலில் இருக்கிறார் என்பதுதான் தகவல்.
தற்போது தனது கணவர் விஜய்யுடன் வசித்த நீலாங்கரை வீட்டில் தங்குவதற்கு அனுமதி கேட்டுத்தான் சங்கீதா மனு செய்துள்ளார். விஜய் பனையூரில் கட்சி அலுவலகத்தை நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாது கடற்கரை அருகில் பட்டினப்பாக்கத்தில் உள்ள அவருடைய விலையுயர்ந்த பிளாட் வீடு ஒன்றிற்கும் அடிக்கடி சென்று வருவார். நீலாங்கரை வீட்டில் சங்கீதா வசிக்க அனுமதி கிடைத்தால் விஜய் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.