'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து
தமிழ்த் திரையுலகத்திலும், அரசியல் உலகத்திலும் கடந்த சில நாட்களாக, விஜய் - சங்கீதா பிரிவும், விவாகரத்தும், விஜய் - த்ரிஷா ஒன்றாக திருமண நிகழ்வில் கலந்து கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின நிகழ்ச்சியில் பேசிய விஜய், “சமீபத்துல இருக்கிற நிறைய பிரச்னைகள்ல, சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்குல்லயா, அதுக்கு நீங்க போராடி, மனசு உடஞ்சு போறத பார்க்கிறேன். அதைப் பார்த்து எனக்கு வலிக்குது. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், நானும் நீங்களும் சேர்ந்து மக்களோட பிரச்னைகளை மட்டும் பார்ப்போம். அதுக்கெல்லாம் மனசு உடஞ்சு போகாதீங்க, அது 'வொர்த்' லாம் கிடையாது,” என்றார்.
அந்த 'வொர்த்' என்ற வார்த்தை வழக்கம் போல டிரெண்டாகி, டிரோல்களாகி சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
விஜய்யின் நடவடிக்கை, பேச்சு குறித்து திரையுலகினரும் இப்போது வெளிப்படையாக கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இது “வொர்த், வொர்த், வொர்த்', ஏனென்றால் இந்த பெண்கள் மற்றுமொரு எர்த் (பூமி). பூமியை நாம் பூமாதேவி என்றே அழைக்கிறோம். சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை. எவனோ ஈவன் (even), அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே, சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு வுமன்-ஏ. இனிய மகளிர் தினம்,” என வாழ்த்தியுள்ளார்.
'வொர்த் என்ற டிரெண்ட்டில் டிரோலையும் வாழ்த்தையும் சேர்த்து அவரது ஸ்டைலில் ஒரு பதிவிட்டுள்ளார்.