உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ?

சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ?

கடார் 2 , பார்டர் 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து சன்னி தியோல் நடிப்பில் உருவாகி உள்ள படம் லாகூர் 1947. ப்ரீத்தி ஜிந்தா, ஷபனா ஆஸ்மி உள்ளிட்ட நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நடிகர் அமீர்கான் தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய காதாபத்திரத்திலும் நடித்துள்ளார். ராஜ்குமார் சந்தோஷி இயக்கியுள்ளார். வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது..

அதே சமயம் லாகூர் என்பது பாகிஸ்தானில் உள்ள நகரம் என்பதால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில் லாகூர் 1947 என்கிற டைட்டிலை வைத்தால் தேவையில்லாத சர்ச்சைகள் கிளம்பலாம் என முடிவு செய்த படக்குழுவினர் தற்போது இந்த படத்திற்கு பத்வாரா 1947 டைட்டில் வைத்துள்ளனர். பத்வாரா என்பது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !