10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி'
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதியவர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முதன்மை வேடத்தில் நடித்து, வெளியாகி உள்ள படம் ‛தாய் கிழவி'. சிங்கம்புலி, முனீஸ்காந்த், அருள்தாஸ், பாலசரவணன், இளவரசு, ரேச்சல் உள்ளிட்டோர் நடிப்பில் மதுரை பின்னணியில் கிராமத்து ஸ்டைலில் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு முக்கிய சமூக விஷயத்தையும் இப்படம் பேசுகிறது. படம் வெளியானது முதலே நல்ல வசூலை பெற்று வந்தது. மூன்று நாளில் ரூ.22 கோடி வசூலித்த இப்படம் கடந்த 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தாண்டில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் தலைவர் தம்பி தலைமையில், வித் லவ் ஆகிய படங்களை தொடர்ந்து தாய் கிழவி படமும் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை தந்த படமாக அமைந்துள்ளது.