மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன்
தெய்வத்திருமகள், சைவம், பொன்னியின் செல்வன் மற்றும் துரந்தர் என பல படங்களில் நடித்தவர் சாரா அர்ஜுன். தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், ஹிந்தியில் துரந்தர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார். அடுத்து ஒரு தெலுங்கு படத்திலும் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் சாரா அர்ஜுன்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனக்கு மேக்கப் போடுவதில் அதிக ஆர்வம் கிடையாது என்று கூறியிருக்கிறார். மேலும், நான் எப்போதுமே இயற்கையான அழகில் என்னை வெளிப்படுத்தவே விரும்புவேன். சினிமா விழாக்களுக்கு சென்றாலும் கூட லேசான மேக்கப் மட்டுமே போடுவேன். திரைப்படங்களில் நடிக்கும் போது மட்டும் கதாபாத்திரங்களுக்கு தேவையான அளவு மேக்கப் போட்டுக் கொள்வேன். மற்றபடி சாதாரண நேரங்களில் மேக்கப் போட்டுக் கொள்ளவே மாட்டேன். அதில் எனக்கு ஈடுபாடே கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் சாரா அர்ஜுன்.