உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிங் படத்தை அடுத்து ரொமான்டிக் காதல் கதையில் நடிக்கும் ஷாருக்கான்

கிங் படத்தை அடுத்து ரொமான்டிக் காதல் கதையில் நடிக்கும் ஷாருக்கான்

ஹிந்தியில் சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். அவருடன் தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதைத்தொடர்ந்து தான் நடிப்பதற்கு பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வந்த ஷாருக்கான், அடுத்து ஒரு ரொமான்டிக் காதல் கதையில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக பாலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

பெரிய பட்ஜெட்டில், முதிர்ச்சியான காதல் கதையில் இந்த படம் உருவாகிறதாம். சமீபகாலமாக ஆக்ஷன் கதைகளிலேயே அதிகமாக நடித்து வரும் ஷாருக்கானை இந்த காதல் கதை அதிகமாக இம்ப்ரஸ் பண்ணி விட்டதால் இதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். என்றாலும் இளமையான கெட்டப்புக்கு மாறாமல் தனது வயதுக்கு ஏற்ற கெட்டப்பிலேயே நடிக்கிறாராம் ஷாருக்கான். இப்படத்தின் படப்பிடிப்பை 2027ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !