உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பல முறை மன்னிப்பு கேட்டார் ரஜினி : அஸ்வத் மாரிமுத்து சொன்ன தகவல்

பல முறை மன்னிப்பு கேட்டார் ரஜினி : அஸ்வத் மாரிமுத்து சொன்ன தகவல்

ஓமை கடவுளே, டிராகன் படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. ரஜினிக்கு இவர் கதை சொன்ன அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், ​கூலி படத்திற்குப் பிறகு, என்னிடம் ஒரு கதை இருப்பதாகக் கேள்விப்பட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை ரஜினி பேசினார். உடனடியாக திங்கட்கிழமை சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். நான் நேரத்திற்கு முன்பே சென்றேன், ஆனால் அவர் எனக்காக ஏற்கனவே அங்கே காத்திருந்தார்.

​இளம் இயக்குநர்களிடமும் அவர் காட்டும் மரியாதையைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். அப்போது ஒரு பெரிய அரசியல் தலைவர் அவரைச் சந்திக்க வந்திருப்பதாக என்னிடம் கூறியவர், அவரை சந்திக்க என்னிடம் அனுமதி கேட்டார். அதற்காக என்னிடம் மன்னிப்பும் கேட்டார்.

​நான் வெளியில் காத்திருந்தபோது, 10 நிமிடங்களிலேயே அவருடைய மானேஜர் வந்து, உங்களை காக்க வைத்ததற்காக ரஜினி சார் மன்னிப்பு கேட்க சொன்னார், அவர் மிகவும் வருத்தப்படுகிறார் என்று கூறினார். அவருக்காக நான் 3 நாட்கள் கூட காத்திருப்பேன். ​கதை சொல்லும்போதும் அவர் மீண்டும் மன்னிப்பு கேட்டார். நான் சொன்ன விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை சொல்லி முடித்து என்னை வெளியில் வந்து வழி அனுப்பும் போதும், அவர் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார். ​நிச்சயமாக இது ரஜினியின் எளிமையையும், சக மனிதர்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பையும் அழகாகப் பிரதிபலிக்கிறது'' என்று கூறியுள்ளார்.

ஆனால். அந்த கதை படமாக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

angbu ganesh, chennai
2026-03-26 09:48:02

தேர்தலில் நிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தினீங்களே ஒரு மன்னிப்பு கூட கேக்கலையே சுயநலவாதி சார் நீங்க