வாசகர்கள் கருத்துகள் (1)
துரந்தார் படத்தை விட அமரன் சிவகார்த்திகேயன் படம் எனக்கு பிடித்தது,
சமீபத்தில் வெளிவந்த ஹிந்தி படமான 'துரந்தர் 2ம் பாகம்' முதல் வாரத்திலேயே ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்து வந்தாலும் மற்றொருபுரம் பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது. படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் ரா அமைப்பின் தலைமை அதிகாரியான மாதவன் சிகரெட் புகைத்தபடியே சீக்கிய மதகுரு கோவிந்த் சிங் எழுதிய தசம் கிரந்தத்தின் வரிகளை சொல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது.
தங்கள் மத குருவின் புனித வாக்கியங்களை எப்படி சிகரெட் புகைத்தபடி சொல்லலாம் என்று இதற்கு சீக்கிய மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. இந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனா ஷிண்டே பிரிவு தலைவரும், மகாராஷ்டிராவில் உள்ள சீக்கியர்கள் குழுவின் தலைவருமான குர்ஜோத் சிங் கீர், மும்பையின் முலுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள மாதவன் நாங்கள் செய்யாத ஒன்றிற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளோம் என்றாலும் மன்னிப்பு கேட்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது: ''தசம் கிரந்தத்தின் வரிகள் எனக்குப் புனிதமானவை மற்றும் தூய்மையானவை. அந்த காட்சியில் நான் சிகரெட்டை முறையாக அணைத்துவிட்டேன், என் வாயிலிருந்து புகை வரவில்லை. மேலும் அந்தக் காட்சி முழுவதும் சிகரெட்டின் எந்தத் தடயமும் இல்லை.
நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ யாரையும் காயப்படுத்த மாட்டோம். நாங்கள் எப்போதும் முழு சீக்கிய சமூகத்திற்கு துணை நிற்போம். இந்த காட்சிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் கூறப்படும் குற்றச்சாட்டை நாங்கள் நிச்சயமாகச் செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மாதவன் பேசியிருக்கிறார்.
துரந்தார் படத்தை விட அமரன் சிவகார்த்திகேயன் படம் எனக்கு பிடித்தது,