உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்தி' பட ரிலீஸ் தேதியை தவறுதலாக அறிவித்ததற்காக மன்னிப்பு கேட்ட இன்னொரு பட தயாரிப்பாளர்

'பெத்தி' பட ரிலீஸ் தேதியை தவறுதலாக அறிவித்ததற்காக மன்னிப்பு கேட்ட இன்னொரு பட தயாரிப்பாளர்


தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பெத்தி'. கடந்த மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பவன் கல்யாண் நடித்த 'உஸ்தாத் பகத்சிங்' படம் வெளியாவதற்காக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள். இந்த நிலையில் தற்போது ஏப்ரல் 30ம் தேதி கூட இந்த படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் திரையுலகில் எழுந்துள்ளது.

இது குறித்து பெத்தி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான தகவலை தெரிவிக்காத நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்று பேசிய சென்னை லவ் ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளர் சீனிவாச குமார் என்பவர் அந்த விழா மேடையில் பேசும்போது பெத்தி திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகும் என்று கூறினார். இது ரசிகர்களை மட்டுமல்ல பெத்தி படக்குழுவினருக்கே மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில், தான் இப்படி தன்னிச்சையாக தேதியை அறிவித்தது குறித்து வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார் சீனிவாச குமார்..

இது குறித்து அவர் கூறும்போது, “அந்த நிகழ்ச்சியில் சென்னை லவ் ஸ்டோரி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று கேட்டார்கள். அந்த சமயத்தில் எங்கள் படத்தின் எழுத்தாளரும் இணை தயாரிப்பாளருமான சாய் ராஜேஷ் பெத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியதால், அது உறுதியான தகவல் தான் என நினைத்து எங்கள் பட ரிலீஸ் தேதியை கூறுவதற்காக பெத்தி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக ஒரு தேதியை குறிப்பிட்டு பேசி விட்டேன்.

ஆனால் அது எவ்வளவு தவறு என்பது அதன்பிறகு தான் எனக்கு தெரிய வந்தது, இதற்காக நான் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பெத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அந்த படம் எப்போது வந்தாலும் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என்பது உறுதி” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !