தந்தை, மகள் உறவை மையமாகக் கொண்ட கதையில் நாகார்ஜுனா 100வது படம்!
தமிழில் ரஜினி நடித்த ‛கூலி' படத்தில் வில்லனாக நடித்திருந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, தற்போது தனது 100வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்த படத்திற்கு கிங் 100 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரா.கார்த்திக் என்பவர் இயக்கும் இந்த படம் குறித்து நாகார்ஜுனா வெளியிட்டுள்ள செய்தியில், எனது 100வது படத்தின் படப்பிடிப்பு 45% முடிவடைந்துவிட்டது. இப்படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தந்தை மகள் உறவை மையமாகக் கொண்ட ஒரு கமர்சியல் கதையில் இந்த படம் உருவாகிறது. ஒரு கதையும் சென்டிமெண்ட் கதைக்குள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 25 முதல் 60 வயது வரையிலான வெவ்வேறு வயது காலகட்டங்களில் தான் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார் நாகார்ஜுனா. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனாவுடன் தபு, சுஷ்மிதா பட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.