உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போரினால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் படப்பிடிப்பு

போரினால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் படப்பிடிப்பு

பதான் படத்திற்கு பிறகு மீண்டும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'கிங்' என்ற படத்தில் நடிக்கிறார் ஷாருக்கான். இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்திற்காக பாலைவனத்தில் ஆக் ஷன் காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தனர். இதன் படப்பிடிப்பை வருகின்ற 9ம் தேதி முதல் ஒரு வார காலம் அங்கு படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருந்தனர். ஐக்கிய அரசு அமீரகம் இதற்கான அனுமதியை வழங்கினர். இந்நிலையில் ஈரான் போர் பதற்றம் காரணமாக இப்போது இந்த படப்பிடிப்பை படக்குழு ரத்து செய்துவிட்டது. அதற்கு பதில் மும்பையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த தயாராகி வருகின்றனர். இந்தாண்டு டிசம்பர் 24ம் தேதியன்று ‛கிங்' படம் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !