90 சதவீத மகுடம் படப்பிப்பு நிறைவு : இயக்குனர் விஷால் தகவல்
நடிகர் விஷால் இயக்கி நாயகனாக நடித்து வரும் படம் 'மகுடம்'. இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை முதலில் ரவி அரசு இயக்கினார். ஆனால், அவருக்கும், விஷாலுக்கும் கருத்து மோதல் ஏற்பட படத்திலிருந்து ரவி அரசு விலகினார். அதன்பின் விஷால் இயக்குனர் பொறுப்பை ஏற்றார்.
கடந்த இரண்டு வாரங்களாக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது அது முடிந்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், “காக்கிநாடாவில் கடுமையான இரண்டு வார படப்பிடிப்புக்குப் பிறகு 'மகுடம்' குழு சென்னைக்கு திரும்பியுள்ளது.
என் அருமையான குழுவினருக்கு நன்றி, குறிப்பாக என் DOP அபினந்தன், பிருந்தா மாஸ்டர் மற்றும் என இயக்கக் குழுவினருக்கு... உங்களுக்கு பாராட்டுகள் பிரபா, எனக்காக எல்லாவற்றையும் தாங்கிப் பிடித்துக் கொண்டதற்கு. என் முழு நடிகர் குழுவுக்கும், குறிப்பாக அஞ்சலி, உங்களின் எந்த ஈகோவும் இல்லாத, ஆடம்பரமில்லாத தொழில்முறை அணுகுமுறைக்கு. என் பெஸ்டி ஜான் விஜய், ஜேபி சார், வெப்ப அலையில் தவித்தும் அமைதியாக தங்கள் வேலையைச் செய்த அத்தனை பெண்களுக்கும், மேலும் என் சிறந்த பாதியான சாய் தன்சிகாவுக்கு... இந்தப் பயணத்தில் நான் கால் விரல் வரை நோய்வாய்ப்பட்டிருந்த போதும் என்னைத் தாங்கி நடத்தியதற்கு. நான் விட்டுக்கொடுக்கவில்லை.
படத்தின் மிகக் கடினமான 90 சதவீத பகுதியை முடித்துவிட்டோம். நாளை முதல் சென்னையில் நமது இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. GV-யின் மேஜிக் விரைவில் நமது முதல் சிங்கிளுடன் வெளிப்படப் போகிறது. கடவுள் ஆசீர்வதிப்பாராக,” என்று தெரிவித்துள்ளார்.