நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம்
ADDED : 20 minutes ago
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர் 2' படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் புதிதாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தயாரிப்பு தரப்பில் ஜெயிலர் 2 படத்தை ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வரும் திட்டத்தில் இருந்துள்ளனர். ஆனால், நெல்சன் இந்த பட பணிகளில் இன்னும் வேலை நிறைய இருக்கு எனக் கூறி விடுபட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார். இதனால் செப்டம்பர் முதல் வாரத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர அவகாசம் கேட்டுள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.