வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை
ADDED : 14 hours ago
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் கதை எழுதி இருக்கிறார். ரசிகர்களுடனான ஒரு கலந்துரையாடலில் 'வாரணாசி' படத்தின் கதை குறித்து அவர் பேசியுள்ளார்.
“ராமர் மற்றும் கும்பகர்ணன் இடையிலான மோதல்தான் இந்தப் படத்தின் கதை. படத்தின் அறிமுக டிரைலரிலேயே ராமர், கும்பகர்ணன், ஹனுமான் ஆகியோரை நீங்கள் பார்த்திருப்பீர்களே. படத்தின் கதை பற்றி மேலும் பேச முடியாது” என்று அவர் கூறினார்.
புராணம், அறிவியல், பேண்டஸி, வரலாறு, ஆகியவை கலந்த கலவையாக இப்படத்தின் கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2027 ஏப்ரல் 7ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.