தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களில் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றார். கடைசியாக எல்ஐகே படத்தில் நடித்தார். இந்தபடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது அடுத்தபடியாக தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார்.
பிஆர் ஷோ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார். முதல் படத்தை இவரிடம் உதவியாளராக இருந்த 6 பேர் குழுவாக இணைந்து ‛தி ஆல்பா யூனிட்' என்ற பெயரில் இயக்குகின்றனர். இந்த படத்தின் கதையை பிரதீப்பே எழுதி உள்ளார். இது நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படம் என கூறப்படுகிறது. நாயகிகளாக மமிதா பைஜூ, ஸ்வாசிகா மற்றும் புதுமுகம் அனாமிகா மஹி ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த கூட்டணியில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் உள்ளார். அவர் நடிக்கலாம் என தெரிகிறது.
விரைவில் இந்த படம் துவங்க உள்ளது.