உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சகுந்தலையாக மாறும் சமந்தா

சகுந்தலையாக மாறும் சமந்தா

இப்போதெல்லாம் புராண படங்களுக்கும், சரித்திர படங்களுக்கும் தான் மவுசு அதிகம். ஓடிடி தளங்களும் இதுமாதிரியான படத்தை விரும்பி வாங்குகின்றன. இதனால் தயாரிப்பும் அதிகமாகிறது. அந்த வரிசையில் அடுத்து உருவாகிறது சகுந்தலை புராணம்.

காளிதாசர் எழுதிய சகுந்தலையின் காதல் கதை மிகவும் புகழ்பெற்றது. இதனை அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமாதேவி மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற ஒக்கடு, அர்ஜுன், சைனிகுடு உள்ளிட்ட படங்களை இயக்கிய குணசேகரன் இயக்குகிறார் .

சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சகுந்தலையாக நடிக்க சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். படத்துக்கு சகுந்தலம் என்று பெயர் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.

சகுந்தலையின் கதை: விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலையும், துஷ்யந்தனும் காதலிக்கிறார்கள். பின்னர் துருவாச முனிவர் சாபத்தால் அந்த காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி துஷ்யந்தனுடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்பது கதை.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !