உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது

சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் மாதம் நடைபெறும். அதன்படி கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய 18வது திரைப்பட விழா கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த விழா நேற்று சென்னையில் தொடங்கியது.

விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் தாணு, இந்திய திரைப்பட திறனாய்வு குழு பொதுச் செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பர் தலைவர் காட்டகர பிரசாத், செயலாளர் ரவி கோட்டாரகரா, நடிகைகள் சுகாசினி, சுகன்யா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கலாச்சார தூதர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சென்னையிலுள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (சத்யம் சினிமாஸ் - சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரின் அரங்குகள்) மற்றும் காசினோ திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன. தொடக்க விழா திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின் 'தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்' என்ற படம் திரையிடப்பட்டது.

இந்த விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் லேபர், கல்தா, சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் இஸ் ஆனந்தன், காட்பாதர், தி மஸ்கிட்டோ பிலாசபி, சீயான்கள், சம் டே, காளிதாஸ், க/பெ ரணசிங்கம், கன்னி மாடம் ஆகிய 13 படங்கள் திரையிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !