உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆல்பத்தில் கவனம் செலுத்தும் ஹன்சிகா

ஆல்பத்தில் கவனம் செலுத்தும் ஹன்சிகா

ஒரு காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு தற்போது கையில் படங்கள் இல்லை. அவர் நடித்து முடித்துள்ள மஹா என்ற படம் மட்டும் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதனால் மும்பையில் உள்ள வீட்டிலேயே செட்டிலாகிவிட்ட ஹன்சிகா, கொரோனா காலத்தில் யூ டியூப் சேனல் தொடங்கி நடத்தி வந்தார். தற்போது இசை ஆல்பங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

முதல் இந்தி ஆல்பமாக வெளியான பாடி ஷேக் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் மாஸா என்ற அடுத்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். யு டியூப்பில் வெளியான முன்றே தினங்களில் 20 மில்லியன் பார்வைகளை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

இந்தி இசை அமைப்பாளர் பிராக், பாடலை இசையமைத்து உருவாக்கி பாடியுள்ளார். அர்விந்தர் கைய்ரா இயக்கி உள்ளார். காதலின் பல்வேறு பரிணாமங்களை சொல்வதாக இந்த ஆல்பம் உருவாகி உள்ளது. இதில் ஹன்சிகா காதலில் உருகி உருகி ஆடியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !