எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நிகழ்ந்த மற்றுமொரு சோகம்
ADDED : 1664 days ago
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் எஸ்.பி.ஜனநாதனும் முக்கியமானவர். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர், இப்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை எடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த இவர், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிறு அன்று மரணத்தை தழுவினார். அவரின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை தந்தது.
அவர் மறைந்து இரு தினங்கள் ஆன நிலையில் அவரது வீட்டில் மற்றுமொரு சோகம் நிகழ்ந்துள்ளது. சகோதரரின் மறைவு தாங்க முடியுமாமல் ஜனநாதனின் சகோதரி லட்சுமி, மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ஜனநாதன் வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு இழப்புகள் அவரது குடும்பத்தை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.