வில்லினாலும் ஓகே!
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். கொரோனா ஊரடங்கின் போது திருமணம் செய்து கொண்ட காஜல், கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் திருமணமாகி விட்ட நடிகைகளுக்கு பெரும்பாலும் ஹீரோயின்கள் வாய்ப்பு கிடைப்பதில்லை. குணச்சித்திர வேடங்கள் அல்லது இரண்டாம் நாயகியாக நடிக்கத்தான் வாய்ப்பு அமைகிறது. தானும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை காஜல் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார் போலும்.
தற்போது கைவசம் பெரிய படங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமானவைகள் தான். எனவே திருமணத்திற்குப் பிறகும் அதே போன்ற வாய்ப்புகளை எதிர்பார்ப்பது தவறு என்பது போல, 'எனக்கு காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம். வில்லியாக நடிப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் கதை பிடித்து இருக்க வேண்டும்' எனப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் காஜல்.