உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛காதல்' நடிகர் பரிதாப மரணம் : ஆட்டோவில் சடலமாக கிடந்தார்

‛காதல்' நடிகர் பரிதாப மரணம் : ஆட்டோவில் சடலமாக கிடந்தார்

ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத், சந்தியாக நடித்த காதல் படத்தில் சினிமா வாய்ப்பு தேடும் இளைஞராக நடித்திருந்தவர் பல்லு பாபு. அந்த படத்தின் கேரக்டர் பெயரான விருச்சிககாந்த் என்பதையே தனது பெயராக வைத்துக் கொண்டார்.

அதன்பிறகு சில படங்களில் நடித்த அவர் சினிமா வாய்ப்புகள் இன்றி மிகவும் சிரமப்பட்டார். உறவினர்களால் கைவிடப்பட்ட விருச்சிககாந்த் வடபழனி முருகன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் செய்தி வெளியாகி சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்தார்கள்.

அதன்பிறகு கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பும் இல்லாமல், சினிமா வாய்ப்பும் இல்லாமல் மீண்டும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இரவு நேரங்களில் பிளாட்பாரத்திலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவிலும் படுத்து உறங்கி உள்ளார். இந்த நிலையில நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் படுத்தவர் அப்படியே மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !