உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பார்ப்பதை எல்லாம் உண்மை என நம்பாதீர்கள் : எஸ்தர் அனில் தத்துவம்

பார்ப்பதை எல்லாம் உண்மை என நம்பாதீர்கள் : எஸ்தர் அனில் தத்துவம்

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான 'திரிஷ்யம்' படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில். பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்தார். தற்போது வெளியான த்ரிஷயம்-2வில் நன்கு வளர்ந்த இளம்பெண்ணாக காட்சியளிக்கும் இவர், கதாநாயகியாகவும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியா பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

சமீபத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட தனது இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் எஸ்தர் அனில். அதுபற்றி அவர் கூறும்போது, இதில் ஒன்று ஹோட்டல் அறையில் உள்ள செயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது. என் சருமம் எவ்வளவு பளபளப்பாக இருக்கிறது பார்த்தீர்களா..? இன்னொரு புகைப்படம் இயற்கையான சூரிய வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் எல்லாம் தெரிகின்றன. அதனால் சோஷியல் மீடியாக்களில் பலர் வெளியிடும் படங்களை பார்த்து அப்படியே உண்மை என நம்ப வேண்டாம்” என கூறியுள்ளார் எஸ்தர் அனில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !