உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சைக்கிளில் வந்து ஓட்டளித்த விஜய் - காரணம் இது தான்

சைக்கிளில் வந்து ஓட்டளித்த விஜய் - காரணம் இது தான்

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வமாய் ஓட்டளித்து சென்றனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓட்டு போடும் இடத்திற்கு சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை பின்தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் வந்தனர். தொடர்ந்து ஓட்டளித்து விட்டு உதவியாளர் ஒருவரின் பைக்கில் வீட்டிற்கு திரும்பினார்.

இதனிடையே விஜய் சைக்கிளில் வந்து ஓட்டளித்த விஷயம் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அதோடு தற்போது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கிட்டத்தட்ட ரூ.100 என்ற நிலையில் உள்ளதால் அதை குறிக்கும் வகையில் மறைமுகமாக பா.ஜ.விற்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிக்கவே விஜய் இப்படி சைக்கிளில் ஓட்டளிக்க வந்ததாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியது.


விஜய் விளக்கம்

இதையடுத்து இப்படி ஒரு செய்தி பரவியதும் விஜய் தரப்பில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛விஜய் நீலாங்கரை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கான ஓட்டுச்சாவடி அருகில் உள்ள தெருவில் தான் உள்ளது. ஆனால் அது குறுகலான தெரு, இதனால் காரில் வருது சிரமம். அதோடு பார்க்கிங் பிரச்னையும் வரும் என்பதாலேயே விஜய் சைக்கிளில் வந்ததாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !