உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் செந்திலுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி

நடிகர் செந்திலுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி

காமெடி நடிகர் செந்தில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் செந்தில். நடிகர் கவுண்டமணி உடன் இவர் நடித்த பல காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டிருக்கின்றன. தற்போது ஒரு படத்தில் கதையின் நாயகானாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ., கட்சியில் சேர்ந்த செந்தில், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்று தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !