உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் றெக்க கட்டி பறக்கும் அனுஷ்காவின் திருமண செய்தி

மீண்டும் றெக்க கட்டி பறக்கும் அனுஷ்காவின் திருமண செய்தி

நிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கும் படத்தில் நவீன்பொலிஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் அனுஷ்கா. இந்தநிலையில், அவரைப்பற்றி மீண்டும் ஒரு திருமண செய்தி டோலிவுட்டில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.

அதாவது, பாகுபலி படத்தில் நடித்த பிறகு அப்பட நாயகனாக பிரபாசும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதையடுத்து அவர்கள் அதை மறுத்ததோடு இருவருமே நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புளி வைத்தனர்.

அவ்வப்போது அனுஷ்கா அவரை திருமணம் செய்ய போகிறார், இவரை திருமணம் செய்ய போகிறார் என செய்திகள் வரும். பின்னர் அது அப்படியே அமுங்கி போகும். இந்நிலையில் தற்போது துபாயை சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும், திருமணத்திற்கு பிறகு துபாயில் அனுஷ்கா குடியேறி விடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனபோதும் வழக்கம்போல் இந்த செய்தி குறித்தும் அனுஷ்கா எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !