உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீடூ குறித்து ஓவியா ஹெலன் டுவீட்

மீடூ குறித்து ஓவியா ஹெலன் டுவீட்

களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஓவியா ஹெலனுக்கு அதன்பிறகு சரியான படங்கள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகி ஓவியா ஆர்மியெல்லாம் தொடங்கினார்கள். இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சினிமாவில் அவர் டாப்பிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதையடுத்து களவாணி 2 படம் மட்டுமே அவர் நடித்து வெளியே வந்தது. அந்த படமும் ஓடவில்லை. ஆனபோதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை வைத்து சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கிறார். இந்தநிலையில், தற்போது தனது டுவிட்டரில் மீடூ குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், நேர்மையை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். மீடூ குறித்து வெளியில் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் என்பது எனக்கு புரிகிறது என்று பதிவிட்டுள்ளார். ஆனால் எந்த விசயத்தை மனதில் கொண்டு இப்படியொரு டுவீட்டை ஓவியா ஹெலன் தற்போது பதிவிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !