உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே பாடலை ஒரு மாதம் படமாக்க ராஜமவுலி திட்டம்

ஒரே பாடலை ஒரு மாதம் படமாக்க ராஜமவுலி திட்டம்

ராஜமவுலி என்றாலே பிரமாண்டம் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் உருவாக்கும் படங்கள் ரசிகர்களை பிரமிக்க வைக்கின்றன. பாகுபலி இரண்டு பாகங்களை பார்த்து வியந்த ரசிகர்களை, அடுத்தததாக ஆர்ஆர்ஆர் என்கிற படம் மூலம் புதிய உலகிற்கு அழைத்து செல்லும் முயற்சியில் இறங்கியுள்ள ராஜமவுலி அதில் 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

இன்னும் எடுக்கப்பட வேண்டியவற்றில் இரண்டு பாடல் காட்சிகள் மீதம் இருக்கின்றனவாம். அதில் ஜூனியர் என்திஆர், ராம்சரண் இருவரும் பங்கேற்கும் மிக பிரமாண்டமான பாடல் காட்சியும் ஒன்று.. சுதந்திர போராட்ட பின்னணியில் அமைந்துள்ள இந்தப்பாடல், நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படமாக்கப்பட இருக்கிறதாம். அதனால் இந்த பாடலை படமாக்குவதற்கு மட்டுமே ஒரு மாதம் ஒதுக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !