உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிசாசு 2வில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது ஏன்? விஜய்சேதுபதி விளக்கம்

பிசாசு 2வில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது ஏன்? விஜய்சேதுபதி விளக்கம்

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அது ஏன் என்பது குறித்து அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

சைக்கோ படம் பார்த்தேன், மிஷ்கின் உழைப்பு பிரமாதமாக இருந்தது. படம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் கதை சொல்லியிருந்தார். ஒரு நாள் யதேச்சையாக போனில் கூப்பிட்டேன். வாங்க பேசலாம் என்றார், போனேன். அவர் பேச பேச எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

நான் ஓசோவோட டிராவல் பண்ணினேன் என்றார். என்னடா டிராவல் இது அவர் படம்தானே பண்றார் என்று நினைத்தேன். 8 மணி நேரம் அவருடன் பேசிய பிறகுதான அவரை புரிந்து கொள்ள முடிந்தது.

பிசாசு கதை கேட்டேன். அந்த கதை ரொம்ப ஆழமாக இருந்தது. படத்தோட கேரக்டர்களை உருவாக்கி வைத்திருந்த விதம் பிரமிக்க வைத்தது. எனக்கு ஏதாவது கொடுங்க ஒரு இரண்டு நாள் பண்ணிக் கொடுக்கிறேன் என்றேன். அவரது படத்தில் பணியாற்றியது பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்காகத்தான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !