டொரோண்டா விழாவில் இரண்டு விருதுகளை பெற்ற ஷார்ட் கட்
டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை மணி தாமோதரன் இயக்கியுள்ள ஷார்ட் கட் பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தின் நாயகனான ஸ்ரீதர், சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.
ஷார்ட் கட் படம் குறித்து இயக்குனர் தாமோதரன் கூறியதாவது: பணத்திற்காக வாக்குகளை விற்பது என்பது பணம் வாங்கிக் கொண்டு கழிப்பிடத்தை வாடகைக்கு விடுவதை போன்றதே. இதன் காரணமாகவே அரசியலும், நாடும் நாற்றமடைகிறது. இது தான் ஷார்ட் கட்டின் மையக்கரு. இதை ஜனரஞ்சகமான முறையில், மக்களுக்கு புரியும் வண்ணம், அதே சமயம் அவர்கள் ரசிக்கும் விதத்தில் கூறியிருக்கிறோம். கையில் சுத்தமாக பணமே இல்லாத நான்கு பேர் அடுத்தவர்களை ஏமாற்றி ஒரே நாளில் எவ்வாறு கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பதை லாஜிக்குடன் சொல்லி இருக்கிறோம். என்றார்.