/
போட்டோ
போட்டோ

முதல்வர் விஜயை தலைமை செயலகத்தில் தினமலர் இயக்குனர் ஸ்ரீனிவாசன் ராமசுப்பு, மதுரை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ராமசுப்பு, கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், இயக்குனர் லட்சுமிபதி ராமசுப்பு, தினமலர் சென்னை பதிப்பு இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
முதல்வர் விஜயை தலைமை செயலகத்தில் தினமலர் இயக்குனர் ஸ்ரீனிவாசன் ராமசுப்பு, மதுரை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ராமசுப்பு, கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், இயக்குனர் லட்சுமிபதி ராமசுப்பு, தினமலர் சென்னை பதிப்பு இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தினமலர் நாளிதழ், சத்யா ஏஜென்சி சார்பில், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ, கோவை கொடிசியா அரங்கில் இன்று (ஆகஸ்ட் 14) துவங்கியது. கலெக்டர் பவன் குமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அருகில் (இடமிருந்து) இஎல்ஜிஐ மார்க்கெட்டிங் துறை தலைவர் பார்த்தசாரதி, இல்ஜிஐ மேனேஜிங் டைரக்டர் பாலகிருஷ்ணன், பி.ஆர்.ஓ., செந்தில் அண்ணா, சத்யா ஏஜென்சிஸ் மண்டல சேர்மன் ஆபிரகாம், சுஜாதா ஹோம் அப்ளையன்ஸ் சேர்மன் உதயத்துல்லா.
தினமலர் நாளிதழ், சத்யா ஏஜென்சி சார்பில், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ, கோவை கொடிசியா அரங்கில் இன்று (ஆகஸ்ட் 14) துவங்கியது. கலெக்டர் பவன் குமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அருகில் (இடமிருந்து) இஎல்ஜிஐ மார்க்கெட்டிங் துறை தலைவர் பார்த்தசாரதி, இல்ஜிஐ மேனேஜிங் டைரக்டர் பாலகிருஷ்ணன், பி.ஆர்.ஓ., செந்தில் அண்ணா, சத்யா ஏஜென்சிஸ் மண்டல சேர்மன் ஆபிரகாம், சுஜாதா ஹோம் அப்ளையன்ஸ் சேர்மன் உதயத்துல்லா.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது. திருத்தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்க மன்னார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது. திருத்தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்க மன்னார்.

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஒத்திகையின் போது கன்னம் மற்றும் நெற்றியில் தேசியக் கொடியை வரைந்து கையில் அலங்கார தட்டுடன் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர். இடம்: எஸ்.டி.ஏ.டி., மைதானம், திருப்பூர்.
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஒத்திகையின் போது கன்னம் மற்றும் நெற்றியில் தேசியக் கொடியை வரைந்து கையில் அலங்கார தட்டுடன் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர். இடம்: எஸ்.டி.ஏ.டி., மைதானம், திருப்பூர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியில் மழை காரணமாக சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளன. இவை பார்ப்பதற்கு நிலவின் மேற்பரப்பு போல இருப்பதாகக் கூறி விண்வெளி வீரர் உடை அணிந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியில் மழை காரணமாக சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளன. இவை பார்ப்பதற்கு நிலவின் மேற்பரப்பு போல இருப்பதாகக் கூறி விண்வெளி வீரர் உடை அணிந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான ஒதுக்கீடு கலந்தாய்வு துவங்கியது. இடம். ஓமந்தூரார், சென்னை.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான ஒதுக்கீடு கலந்தாய்வு துவங்கியது. இடம். ஓமந்தூரார், சென்னை.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்திலுள்ள பரதேசி ஆறுமுகசாமி கோவிலில், குருபூஜை விழா நடந்தது. இதில், குழந்தை வரம் வேண்டி, குளக்கரையில் மண்டியிட்டு கையை பின்னால் கட்டிக் கொண்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்திலுள்ள பரதேசி ஆறுமுகசாமி கோவிலில், குருபூஜை விழா நடந்தது. இதில், குழந்தை வரம் வேண்டி, குளக்கரையில் மண்டியிட்டு கையை பின்னால் கட்டிக் கொண்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள்.
Advertisement
Advertisement

தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது
தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது

கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது























