மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2181 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேகம் நடந்தது.
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.