ஆர்.கே.பேட்டை அய்யப்ப பக்தர்கள் வருகை
ADDED :2185 days ago
ஆர்.கே.பேட்டை: திருத்தணி சரவண பொய்கை, வேலுார் மாவட்டம், சோளிங்கர், நரசிம்ம சுவாமி குளக்கரையில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர்.
இந்நிலையில், முன்கூட்டியே விரதத்தை துவக்கிய பக்தர்கள், நேற்று 17ல், சபரியில் சுவாமி தரிசனம் செய்தனர்.இதே போல், சோளிங்கர், நரசிம்ம சுவாமி மலைக்கோவிலில், கார்த்திகை முதல், ஞாயிறு உற்சவம் நேற்று 17ல் கோலாகலமாக நடந்தது.கார்த்திகையில், ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தரிசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.