திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2261 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 1008 சங்கு அபிஷேகம் நடந்தது.
கார்த்திகை மாத சோமவாரங்களில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு சிவாலயத்தில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி, அக்னி தலமான திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி இன்று (நவ.,18ல்)1008 சங்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.