உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்ம பெருமாள் கோவிலில் அன்னகூட்ட மகோற்சவம்

நரசிம்ம பெருமாள் கோவிலில் அன்னகூட்ட மகோற்சவம்

நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், அன்னகூட்ட மகோற்சவம் நேற்று நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில்.

இங்கு, மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோவிலை 32 முறை வலம் வந்தால், திருமண தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பதால், திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு செல்வர்.இந்த கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அன்னகூட்ட மகோற்சவம் நேற்று நடந்தது. மகோற்சவத்தை முன்னிட்டு, நேற்று, காலை, 8:00 மணிக்கு, திருமஞ்சனம் நடந்தது. காலை, 8:30 மணி முதல், 10:30 மணி வரை, மூலவர் தரிசனம் கிடையாது. பின், காலை, 10:45 மணிக்கு, காய்கறிகள், இனிப்புகள், பலகாரங்கள், 150 கிலோ சாதம் படைக்கப்பட்டு அன்ன கூட்ட மகோற்சவம் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு உற்சவர் பிரகலாதர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருக்கோவில் உள்புறப்பாடு நடந்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.திருமஞ்சனம்இன்று, சுவாதி திருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை, 8:30 மணிக்கு திருமஞ்சனமும், காலை, 9:00 மணிக்கு ஹோமங்களும், காலை, 10:30 மணிக்கு தீர்த்த பிரசாதமும், பகல், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும். மாலை, 5:30 மணிக்கு, உற்சவர் பிரகலாதர் வண்ண மலர்களால் அலங்களிக்கப்பட்டு கோவில் உள்புறப்பாடும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !