உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.திருச்சி ரோடு மங்கம்மாள் கேணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் முளைபாரி, பால் குடங்களுடன் ஊர்வலமாக ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு செய்த பின்னர், அங்கிருந்து தேரோடும் வீதிகளை சுற்றி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். ஹோமம், திருமஞ்சனம் மற்றும் பல்வேறு பூஜைகளை தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் நடந்தது. அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !