உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்ஸவம்

நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்ஸவம்

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமியை யொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமி விழா நடந்தது. இதனையொட்டி, நேற்று முன்தினம் 11ம் தேதி மாலை 4:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, முருகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் கோவிலின் மலை அடிவாரத்தை 16 முறை வலம் வந்து சுவாமியை வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து, கோவில் மலையின் கீழ் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.8:30 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங் காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங் காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !