விமர்சனம் செய்யட்டுமே!
ADDED :2160 days ago
ஒரு வீட்டில் இருந்த தாத்தா, தன் பேரன்களை ஒழுங்காகப் படிக்கச் சொல்லி நச்சரிப்பார். இதனால் தாத்தாவை குழந்தைகளுக்கு பிடிக்காது. அந்த பேரன்கள் கிளி ஒன்றை வளர்த்தனர். அதற்கு பேசக் கற்றுக் கொடுத்தனர். அதன்படி கிளியும், ""தாத்தாவே செத்துப் போ, தாத்தாவே செத்துப் போ” என திரும்பத் திரும்பச் சொல்லியது. தாத்தாவுக்கு வருத்தம். ஒருநாள் பாதிரியாரின் வீட்டுக்குப் போனார் தாத்தா. அங்கேயும் ஒரு கிளி இருந்தது. அது அங்கு நடந்த பிரார்த்தனையைக் கேட்டு, "ஆமென்..ஆமென் என்றது.