உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை

தர்மபுரி பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை

தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன்  கோவில்களில் உள்ள நந்திகளுக்கு, நேற்று 24ம் தேதி சிறப்பு பூஜைகள் நடந்தன.

தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி  மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, நேற்று 24 ம் தேதி மாலை, 4:00  மணிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, பல்வேறு  திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

மாலை, 5:00 மணிக்கு, நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு மேல், மூலவ மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன.

இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் உள்ள நந்திக்கு, பிரதோஷத்தையொட்டி, நேற்று 24ல் சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன.

பக்தர்கள் வழிபாடு: அரூரில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று 24 ல், நடந்த சிறப்பு  வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி  மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில்,  பிரதோஷத்தையொட்டி, சுவாமி க்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள்  நடந்தன. நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. இதே  போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீ வாணீஸ் வரர் கோவில், பொம்மிடி,  அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில்  ஆகியவற்றில் நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !