உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரம் சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

சிவாலயபுரம் சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

மதுரை: மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் நந்திதேவருக்கும், சங்கர லிங்கம் சுவாமிக்கும், தை மாத  வளர்பிறை பிரதோஷம் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நேற்று (பிப்.6ல்) நடைபெற்றது.  

நாட்டில்  மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர். முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன்,  பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிஷேகம் நடைபெற்றது.  சுவாமி விபூதி சர்வ  அலங்காரத்தில்  அருள் பாலித்தார்.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம்  பிரசாதம் வழங்கப்பட்டது.  இன்றைய உபயதாரர்கள் கோவையைச் சேர்ந்த  டாக்டர். சித்ரா ராஜலெட்சுமி,  குமார் குடும்பத்தினர், ஸ்ரீதர் குருக்கள் சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை  நிர்வாகிகள் பூஜைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !